payanangal......

payanangal......
the messages in the path... of life...

with Muthuva tribals

with Muthuva tribals
25 old ladies willing to get free food in one single panchayat.. abononed by the community..

Saturday, April 23, 2011

இன்று சந்தித்தவள் ....!!!

காலையில் மீன் கடையில்.....
நின்று கொண்டிருந்தவள்.....
அப்பாவிடம்....
மீனை தண்ணீரில் விட்டு வளர்க்கலாமா??!!
என கேட்டு கொண்டே இருந்தாள்...
பேரம் பேசி கொண்டிருந்த...
அப்பாவின் "சரி" க்காக,
அவளுடன்....
மூச்சு திணறிக்கொண்டிருந்த
மீனும் காத்து கொண்டிருந்தது....

Sunday, March 20, 2011

மனைவி

இன்றைய மதிய உணவில் சுவை கொஞ்சம் கூடுதலாக இருந்தது......
ஆர்வமாக உண்ணும் போது தான்.....
அந்த தலை முடி தென்பட்டது.....!!
முடிவு செய்து விட்டேன்,
மனைவியின் கூந்தலுக்கு சுவை உள்ளது....!!!

நினைவுகள்

பூக்களை பார்க்கையில்...
பெண்களின் நினைவுகள்...!!!!
தோழியிடம் கேட்டேன்...
உதட்டை சுழித்து... ம்ம்... முத்திடுச்சு என்றாள்...!!!
அவள்
...சொல்லும்போது பூக்களின் நினைவுகள்...!!

மனைவி

எனக்காகவே உடுத்துகிறாய்...
எனக்காகவே சமைக்கிறாய்...
எனக்காகவே நடக்கிறாய்....
எனக்காகவே வாழ்கிறாய்...
என்னை திருப்தி படுத்துவதே உன் நோக்கமாக இருக்கிறது....
...எப்படி புரிய வைப்பது ??
நீ திருப்தி அடைவதில் தான்,
என் திருப்தி உள்ளதென்று??

நான்...

எதையோ தேடி அலைகிறேன்...
சில நேரம் தொலைகிறேன்....
சில நேரம்.. கிறுக்குகிறேன்....
மயங்குகிறேன்...
மயக்கபடுகிறேன்...
...மழையை வெறுக்கும் மனநிலை...
ஒரு பாடலில் உயிர்க்கும் காதல்..
ஏதேதோ ஈர்ப்புகள்..
என்னவோ ஒரு ஏக்கம்..
எதற்கோ கண்டிப்பாக அலைகிறேன்..!!

என்னை செதுக்கியவள்...

விரல் நுகர மொக்கு..
கண்கள் நோக்க தும்பி..
'எப்'பொழுதும் இனிமை......
என்னை செதுக்கிய பெண் என்னும் உளி!!
அவளால் தான் நானானேன..
இல்லையேல் நாயாகி இருப்பேன்!!

சிகப்பு ஓவியம்..

ஒரு மழைக்கால அதிகாலையில் ...
சிகப்பு புடவையில்
புள்ளி வைத்து கொண்டிருக்கையில்,
கோடு கிழிக்கையில்,
எல்லாம் இல்லை...
...தள்ளி நின்று தான் இட்ட கோலத்தை..
ரசிக்கையில் தான்..
அவள் ஓவியமானாள்..!!!