காலையில் மீன் கடையில்.....
நின்று கொண்டிருந்தவள்.....
அப்பாவிடம்....
மீனை தண்ணீரில் விட்டு வளர்க்கலாமா??!!
என கேட்டு கொண்டே இருந்தாள்...
பேரம் பேசி கொண்டிருந்த...
அப்பாவின் "சரி" க்காக,
அவளுடன்....
மூச்சு திணறிக்கொண்டிருந்த
மீனும் காத்து கொண்டிருந்தது....
No comments:
Post a Comment